Tuesday, January 22, 2008

உனக்கு மட்டும் ஏனடி புரியவில்லை?

என் கற்பனைகளுக்கு
உன் உரு கொடுத்தேன்,
அவை கவிதைகளாயின...

உனக்கு ஏனோ புரியவில்லை
அவை தமிழ்த்தாவனி போட்ட உன் உருவம் என்று...

ஊரார் கேட்கின்றனர் -
உரு கொண்ட கவிதைக்கு
உயிர் கொடுப்பது யாரென்று?

உன்னை காட்டிக் கொடுக்க விருப்பமில்லை,
உனக்கென்று இருக்கும் என் உயிரை
விட்டுக்கொடுக்கவும் தெரியவில்லை,
பதில் சொல்ல முடியவில்லை,
உனக்கு மட்டும் ஏனடி புரியவில்லை?

1 comment:

anantha said...

Thalaiva!!!! Came in from your youtube profile....

Please post more on youtube! Kuthu vaazhga :)