Tuesday, January 22, 2008

உனக்கு மட்டும் ஏனடி புரியவில்லை?

என் கற்பனைகளுக்கு
உன் உரு கொடுத்தேன்,
அவை கவிதைகளாயின...

உனக்கு ஏனோ புரியவில்லை
அவை தமிழ்த்தாவனி போட்ட உன் உருவம் என்று...

ஊரார் கேட்கின்றனர் -
உரு கொண்ட கவிதைக்கு
உயிர் கொடுப்பது யாரென்று?

உன்னை காட்டிக் கொடுக்க விருப்பமில்லை,
உனக்கென்று இருக்கும் என் உயிரை
விட்டுக்கொடுக்கவும் தெரியவில்லை,
பதில் சொல்ல முடியவில்லை,
உனக்கு மட்டும் ஏனடி புரியவில்லை?

உயிர்த்தெழுந்தேன் நான்...

கவிதை எழுத நினைத்து
கண் மூடிப் பார்த்தேன்...

நீ வந்து நின்றாய்.

உன் சிரித்த முகத்தைப் பார்த்து
செத்துப்போனது என் கவிதை!

உயிர்த்தெழுந்தேன் நான்...

நிம்மதி ???

தாகம்,பசி,வலி,வேதனை,
ஆசை,ஏக்கம்,சோர்வு,
கனவு,நினைவு
என்று அனைத்திற்கும் விடுமுறை அளிக்கிறேன் -
நான் உன் மடியில் படுத்து உறங்கும் போது...

...

அலாரம் அடித்து
தூக்கம் கலைந்தபின் தான் உண்ர்ந்தேன்,
அந்த நிம்மதி கூட,
கனவில் தான் என்று...

முதல் கவிதை!

நண்பர்களே,

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலில் கவிதை எழுதினேன்...
"கவிதை" என்று தலைப்பு கொண்ட அந்த இரண்டுவரி கவிதை...

"கவிதை"

காதலில் உள்ள கட்டபொம்மனை
காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்!

பஸ் ஸ்டாண்ட் கவிதை...

கூட்டம்,
நெரிசல்,
வியர்வை,
ஜன்னலோர சீட்,
ஓடிப்போய் ஏறியது,
ஓடவிட்டு ஏறியது,
படிகட்டு பயணம்,
பல கைகள் மாறி வாங்கிய டிக்கெட்,
அதன் ஒரு மடிப்பு -
அந்த 'மஞ்சள் சுடிதார்' போட்டவளுடையது,
என்ஜின் இரைச்சல்,
அதை மறந்த ட்ரைவர்,
மேலே வர சொன்னதற்கு கலாய்க்கப்பட்ட கண்டக்டர்,
கூரையில் தாளம்,
கானா பாட்டில் கலைந்து போன பயன கலைப்பு,
இன்னும் எத்தனையோ...

நினைவுக்கு வந்தது
சென்னை மாநகர பேருந்து பயணம்...

நிற்காமல் போனதொரு பேருந்து
நான் இதை எழுதிய தருணம்!