Tuesday, January 22, 2008

பஸ் ஸ்டாண்ட் கவிதை...

கூட்டம்,
நெரிசல்,
வியர்வை,
ஜன்னலோர சீட்,
ஓடிப்போய் ஏறியது,
ஓடவிட்டு ஏறியது,
படிகட்டு பயணம்,
பல கைகள் மாறி வாங்கிய டிக்கெட்,
அதன் ஒரு மடிப்பு -
அந்த 'மஞ்சள் சுடிதார்' போட்டவளுடையது,
என்ஜின் இரைச்சல்,
அதை மறந்த ட்ரைவர்,
மேலே வர சொன்னதற்கு கலாய்க்கப்பட்ட கண்டக்டர்,
கூரையில் தாளம்,
கானா பாட்டில் கலைந்து போன பயன கலைப்பு,
இன்னும் எத்தனையோ...

நினைவுக்கு வந்தது
சென்னை மாநகர பேருந்து பயணம்...

நிற்காமல் போனதொரு பேருந்து
நான் இதை எழுதிய தருணம்!

No comments: