Monday, July 19, 2010

நன்றி...

சொந்த ஊரிலிருந்து
சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன்
டூ வீலரில்...

வழியில் லிஃட் கேட்டு ஏறிக்கொண்டாள்
என் தாய் வயதில் ஒரு பெண்மணி.

சில கிலோமீட்டர் கடந்தபின்
நிறுத்தச் சொன்னாள்.
நிறுத்தினேன்.

என் தோள்பிடித்து இறங்கியவள்
திரும்பிக்கூடப் பார்க்காமல் சொன்னாள்
"பத்திரமா போய்ட்டு வா ராஜா" என்று.

நகர மனமில்லாமல் நின்றுவிட்டேன்
அவள் நன்றி சொன்ன விதத்தை கேட்டு!

Thursday, July 01, 2010

ஏசி பஸ்...

சலவை நோட்டுகள் மட்டுமே
பயணசீட்டு வாங்க பயணிக்கின்றன...
சலவை செய்யாத மனங்களின்
கைகளில் மாறி மாறி!